Wednesday 21 October 2015

விடுவித்துகொள்ளல்

எல்லா நேரமமும் இரைந்து கொண்டிருக்கிறது அருவி சத்தங்களில் இருந்து என்னை கொஞ்ச நேரமேனும் விடுவித்துக்கொள்ள அந்த்தப் பாடலை இசை நான் இந்த வாழ்க்கையில் இருந்து தப்பித்து செல்ல விரும்புகிறேன் துரோகங்களில் இருந்தும் வஞ்சங்களில் இருந்தும் வழி மாறி வேறெங்காவது சென்றுவிட விரும்புகிறேன் இசையை தவிர எனக்கு வேறு சப்தங்களை பிடிக்கவில்லை மௌனங்களுக்குள் பிரவேசித்து பதுங்கிகொண்டுவிட்டால் பாதுகாப்பாய் இருப்பேன் என்றுணர்கிறேன் மழை சத்தம் பிடிக்கிறது சன்னல் கண்ணாடிகளில் மோதி உடையும் மழையின் சத்தம் ஒரு துளிக்கும் மறு துளிக்கும் இடையே நான் ஜீவிக்க விரும்புகிறேன் துளிகளோடு சேர்ந்து உடைந்தாலும் மேல் மழையோடு சிதறுதல் பேரெழில் மழையினது சன்னதத்தில் மனங்குளிர நனைந்திருத்தல் மற்றெல்லாவற்றயும்விட எனக்கு முக்கியம் மனிதர்களிடத்தில் என்ன இருக்கிறது ? மழையிடத்தில் எல்லாம் இருக்கிறது நான் மனிதர்களிடமிருந்து தப்பி மழையினது கருப்பையில் சூல் கொள்ள விரும்புகிறேன் மீண்டும் புதுத் துளியாய் பிறந்தால் புதுராகம் இசைப்பேன் மண்வாசம் துளிர்க்க

எனக்கு தேவையெல்லாம்
இங்கிருந்து
தப்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment