Thursday 1 October 2015

...................................

ஒரு வழிபோக்கனின் புன்னகையை விடவும்
எளிமையாக   இருந்தது 
நேற்று இறுதியாக
நீ வன்மம் மறைத்து சிரித்தது


சுலபத்தில்
சரித்து விடுகிறாய்
கோட்டைகளை
இடிந்து விழுகின்றன
நம்பிக்கைகள்

உன் விழிகளின்
மொழி புரிவதில்லை
பாவை  அலைவுறும்  திசை
அதிவேகமாக இருக்கிறது
இக்காலங்களில்
அது கொலை பழகுகிறது

நேற்றுன்னை
வேண்டாவெறுப்பாய் ஸ்பரிசிக்கையில்
நீலம் பாரித்த உடலை கண்டு
தோழி கேட்டாள்
சர்பத்தோடும் நீ  புணர்வாயோ
என்று

நீ விஷமாகிவிட்டாய்
சொற்களும் சிரிப்பும்
கூட
விஷம் பூசுகின்றன
என்னை போன்ற
மந்தையில் இருந்து தொலைந்த ஆடுகளையும் விடுவதில்லை
அது

ஆமாம் , ஒத்துக்கொள்ளத்தான்வேண்டும்

மன்னிப்பின் அர்த்தம் தெரியாத விஷம்  நீ

No comments:

Post a Comment