Thursday 1 October 2015

......................................

நீ பூக்களை அறிவாய்
அதன் உள்ளிருக்கும்
தேன்  அறிவாய்
எப்போதாவது
மடல் உதிர்க்கும்
காற்றறிவாய் 

விதவிதமான நிறங்கள் அறிவாய்
நிறத்திர்க்கொன்றாய் மலர்கள் அறிவாய்
நிஜங்கள் அறிவாய்
நிழல்கள் அறிவாய்


சூதறிவாய்
கள்ளமறிவாய்
தெகிடியறிவாய்
பொய்மையறிவாய்

வார்த்தைகள் மறத்தல் அறிவாய்
வதை புரிதல் அறிவாய்
கண்ணீர் ருசித்தல் அறிவாய்
கருவை சிதைத்தல் அறிவாய் 

இத்தனை அறிந்த நீ
என்றுமே
அறிந்ததில்லை


எனக்கு நேர்ந்த எதையுமே

No comments:

Post a Comment