Thursday 8 October 2015

..................................................

காயங்களை பரிசளிக்காதவர்கள்
நினைவில்
ஆழ ஊடுருவுவதில்லை
நெஞ்சை  நெருஞ்சி முள்ளாய்
குத்தி குத்தி ரணமாக்கும்
உறவுகளைத்தான்
நினைவு
சித்திரமாய் வரைந்து கொள்கிறது

விஷ வாரத்தைகளில்  தேன் தடவி
கடை  விரிக்கும்
வியாபாரிகளிடமே
அதிகம் ஏமாறுகிறோம்

சொந்தம் என சொல்லி
வருபவனே
காலடியில் குழிபறிக்கிறான்
அவர்களை
எளிதில் நம்புகிறது
மனம் என்னும் மாயம்

சொற்களில் மாலைகட்டி
கழுத்தினில் சுருக்கிடும்
சிநேகிதர்கள் நிரம்பியது
நம் சூழல்

நேசம் நீ என் உறவு
என நிதம்
பேசும் காலமெல்லாம்
மலையேறிப்போனகாலத்தில்
எச்சரிகையாக இல்லையென்றால்
நொடிப்பொழுதில்
களவாடப்படுவோம்
ஒவ்வொரு துளி கண்ணீராக
ஒவ்வொரு துளி கண்ணீராக 

No comments:

Post a Comment