Thursday 1 October 2015

கொலை பழகுதல்

தனிமையின் தடயங்கலேயின்றி
கனத்த என் வீட்டின் மௌனத்தில்
உன் மோசமான பிம்பம்
விழுகிறது
நான் அதை அனுமதிக்க கூடாது


சத்ருக்களின் அபிலாஷைகளை
நான் பொருட்படுத்துவதில்லை
எனினும்
அவ்வப்பொழுது  முகிழ்க்கிறாய்
நீ
என் உயிரென்னும் ஜீவ நதியில்

உன் நினைவுகளால்
அவதியுற்ற என் மனம்
வேறதையும் விட
கிழித்துப்போட நினைப்பது
உன்னைப்பற்றிய
கடந்த கால பக்கங்களை

நான் உன்னை
எவ்வளவு நேசித்தேன்
என்ற பட்டியல் இடும்
அவகாசம் எனக்கில்லை
அதை செவியுறும்
பொறுமையும்  உனக்கில்லை

கடைசி வரையிலும்
உன் காதில்
விழாமலே போனது
என் கேவல்

இது என் சமயம்
காரியங்களுக்கு பதில் செய்யவேண்டும்
வெறும் குரல்களுக்கு பதில் மொழிந்தது போதும்
இனி செயல்களுக்கு

எனை இம்சித்த
எனை கொல்லாமல் கொன்று சிரித்த
உன் வன்மத்தை
பழிதீர்க்கவென 
உன் கழுத்தில் கால் வைத்து
ஏறி நிர்ப்பேன்
கண்ணில் சுடு நீர் வழிய



No comments:

Post a Comment