Sunday 25 October 2015

கைவிடப்பட்டவர்களின் கதி



என் தோட்டத்து மரத்தில்
வந்தமர்ந்த குருவி
என்னை பொருட்படுத்தியேயிராதபோதும்
இல்லை ஒரு வருத்தமும்

வாஞ்சையோடு அழைக்கையில்
முகம் திருப்பிக் கொண்ட
பூனைக் குட்டியோடு
இல்லை ஒரு பிணக்கும்

காற்று வேண்டி
தோட்டத்தில் அமர்ந்திருக்கையில்
என்னை நிரகரிக்கும்படியாக
ஆடாது அசங்காது
நின்ற மரங்களின் மீது
இல்லை ஒரு கோவமும்

நான் தூங்கும்போது பொழிந்திருந்துவிட்டு
கண்விழித்ததும் காணமல் போன
மழையின் மீது
இல்லை ஒரு குற்றச்சாட்டும்

என் வருத்தமெல்லாம்
என் ஏக்கமெல்லாம்
நீ என்னை பொருட்படுத்தாததும்
நீ என்னை நிராகரித்ததும் தான்
உயிர் வலிக்க
தரையடித்து அழச்செய்கிறது

காற்றில் தன்போக்கிர்க்கு
பறந்துபோகும்
உதிர்ந்த இலையென ஆனேன்
கைவிடப்பட்டவர்களின்  கதியெல்லாம் இதுதானே

No comments:

Post a Comment