Wednesday 28 October 2015

நானின்றி ...

எப்போதும்
நான் இல்லாமலேயே
நிகழ்ந்துவிடுகின்றன
என் குறித்த
எல்லா காரியங்களும்

நான் தொடுவதற்கும்
ஸ்பரிசித்தது முடிப்பதற்கும்
முன்பே
காரியங்கள்
சித்தி அடைந்திவிடுகின்றன

என்றாகிலும்
நான் உடனிருக்க
முயல்கிறேன
எனை தவிர்த்தே
அரங்கேறுவதில்
அத்தனை முனைப்பு

நானின்றி
நிகழ்கிறது
என் சுவாசம்

நானின்றி
நிகழ்கிறது
என் காலம்

நானின்றி
நிகழ்கிறது
என் வாழ்வு

நானின்றி
விரிகின்றன
என் திசைகள்

நானின்றி
உதிக்கிறது
என் சூரியன்

நானின்றி
சிவக்கிறது
என் அந்தி

எனக்கும்
ஏனயவைகளுக்குமான
இடைவெளியில்
இருக்கும்
உலகோ
மிகப்பெரிது

நான்
அனுமதித்து
கொண்டுதான் இருக்கிறேன்
என் காலம்
நான் இன்றி சுழல்வதை
மற்றும்
என் சுவாசம்
நானின்றி நிகழ்வதை

No comments:

Post a Comment