Sunday 25 October 2015

எனது கவிதை

காற்றும் மழையும் 
நான் கொஞ்சி மகிழ்ந்த அணிலும் 
அறியும் எனது கவிதையை 

எதிலிருந்தும் 
எழுதாமல்
என்னிலிருந்து
தன்னைத் தானே எழுதிக்கொள்ளும்
என் கவிதைகள் அறியும் என்னை

எனக்கும் கவிதைகளுக்கும்
இடையே ஒன்றுமில்லை
நேசமாய் தழுவிக்கொள்ளும்
காற்றைத் தவிர

உனக்கோ
என்னையும் தெரியவில்லை
என் கவிதைகளையும் தெரியவில்லை

கண்ணீர் தொட்டு
காற்று எழுதும்
என் கவிதைகள்
எப்போதும் சரணடையாது உன்னிடம்
என் கவிதைக்குள்
நான் என்பது நான் மட்டுமே
நீ ஒருபோதும்
அதன் உலகமாகமாட்டாய்

No comments:

Post a Comment