நிறைவேரிடாத ஆசைகளோடும்
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளோடும்
நீளும் இந்த வாழ்வு
யாருக்காக
ஆட்களற்ற பூங்கா நாற்காலியில்
ஒற்றையாய் உதிர்ந்திருக்கும்
மஞ்சணத்தி மலர்
யாருக்காக
ஊரே உறங்கும்
நடுநிசியில்
அடித்து பொழியும்
மழை
யாருக்காக
கேட்பவர் உண்டோ
என்ற தகவலேதும் அறியாமல்
இந்த மாலையில்
ஓயாமல் இசைக்கிறதே குயில்
யாருக்காக
மொட்டும் பூவுமாய்
நிறை மாத கர்பிணியின்
அழகோடு
தென்றலில் தலையசைக்கும்
பூவரச மரம்
யாருக்காக
ஆட்கள் இறங்கிய
இரயில் பெட்டியில்
நிலவும் நிசப்தம்
யாருக்காக
யாருமற்ற ரயில்மேடையில்
தனியனாய் அமர்ந்திருக்கிறேனே
யாருக்காக
இலக்கற்று
வரையறையேதுமின்றி
எழுதிய இந்தக் கவிதை
யாருக்காக
No comments:
Post a Comment