Thursday 1 October 2015

...................................

நான் புரட்டிக்கொண்டே இருக்கும்
உன் நியாபக பக்கங்கள்
நைந்து  உதிரப்பார்க்கின்றன

நான் அவ்வப்பொழுது
கண்களை மூடி
நினைத்துப்பார்க்கும்
உன் முகம்
கொஞ்சம் கொஞ்சமாய்
மஞ்சலடைந்து வருகிறது

உன் புகைப்படத்தை
கிழித்திப்போடும்
எத்தனத்தில்
உடல் நடுங்கி மீள்கிறது

இறுதியாக சொல்
நான் உனக்கு வேண்டாமா

நான் உடலதிர
நினைத்துப் பார்ப்பது
நாம்  ஒன்றாய் இருந்த நாட்களைத் தான்
உனக்கப்படி வாய்ப்பேதும்
கிட்டவில்லையா

நேற்றொரு கனா கண்டேன்
மணிக்கட்டில்
ரத்தம் சொட்ட சொட்ட
நான் செத்துக் கொண்டிருந்தேன்

நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் இப்பொழுது ?







No comments:

Post a Comment