Tuesday 29 October 2013

நிர்தாட்சண்யம்

அறையெங்கும் நிறைந்திருக்கிறது 
அத்துவானப் பேரமைதி 
உதிர்ந்த மலரைப் போல 
மௌனம் போர்த்திக் கிடக்கிறது காலம்     
அரவமற்ற பொட்டலில்  பெய்யும் 
மாரியென கண்கள் 
நத்தையென   நகரும் 
காதலற்ற வெறும்நாட்கள்  
கூழாங்கல்லின்   அடியில் 
தேங்கிக் கிடக்கும் இருளைப் போல 
தனித்த வாழ்வு 

தானே   போட்டு  
தானே  சுவைக்கும் 
தேநீரின்   சுவை போல 
பகிரவென யாருமற்ற 
கொடும்வாழ்வின் பக்கங்கள் 
கொடும்  கசப்பென்கிறேன் 
நீங்களோ 
பைத்தியம் என்ற 
தாட்சண்யமற்ற  ஒரு வார்த்தையில் 
என் வாசலை 
கடந்து போகிறீர்கள் 

~~க.உதயகுமார்

2 comments:

  1. Thambi how are you. I read all the posts. Really Amazing. If you dont remember me - then i am Vinoth Kanna's brother who studied with you in Adhiyamaan

    ReplyDelete
    Replies
    1. அண்ணா ...எப்படி இருக்கீங்க ....கடைசியா திருவான்மியூரில் உங்க கூட பேசிகிட்டே குடிச்ச தேநீர் சுவை இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது . நாம் சந்தித்து எட்டு வருடங்கள் இருக்குமில்லையா ....

      உங்க மின்னஞ்சல் முகவரி கொடுங்க ....நாம பேசலாம் ...

      Delete