Friday 25 October 2013

ஒன்றுக்கென மற்றொன்று


வெறித்தபடி  நீளும்
இந்தப்பகலுக்கு
சொல்லவென
ஆறுதல்  ஒன்று
ஊர்க்குருவியிடம் இருக்கிறது

வெயிலில் நீந்திப்பறக்கும்
ஊர்குருவியிடம்
பகிரவென
இளைப்பாறுதலின் குறிப்பொன்று
நொச்சி மரக்கிளையில்  பூத்துக்கிடக்கிறது

நிழலைப் பொழியும்
நொச்சி மரக்கிளை அடியில்
சாவகாசமாய் அசை போடும்
பசுவின் மடி நுனியில்
தன் முலை முட்டும் குட்டிக்கென
சொட்டு சொட்டாய்
கசிகிறது மாகாதல்

இளங்கன்றின் நாநுனியில்
ஒரு யுகத்துக்குமான
பேரன்பின் ஈரம்


--க.உதயகுமார்

No comments:

Post a Comment