Friday 18 October 2013

ஆதலால் காத்திருக்கிறேன்



வாதையை விடவும் அனத்துகிறது
நின் பிரிவின் சூடு
புறக்கணிப்பின் சிலுவையில்
ரத்தம் சொட்ட சொட்ட
என்னை ஏன் கைவிட்டாய் 

நீ அலட்சியப்படுத்தும் என்னை
சுமப்பது
எனக்கு வலிக்கிறது
உதிர்காலத்தின் இலையென
நெஞ்சம் கனத்து விழுகிறேன்
நீயற்ற முகட்டிலிருந்து

வழிதவறிய  எறும்பென
பரிதவித்து
உன்சாயலொத்த அன்பை
தேடித் தேடி களைத்துப் போகிறேன்

உன் நேசத்தின் மழையைத் தவிர
வேறெதிலும் நனைய விருப்பமில்லை
ஊடலின் மேகம் உடைந்து
நீ பொழிந்தென்னை சிநேகிக்கும்  நாள் என்னாளோ

~~க.உதயகுமார்

No comments:

Post a Comment