Monday 21 October 2013

நமதிடைவெளியில் நெளியும் கவிதை



உனதன்பின்  தீண்டலறியா  இந்நாட்களில்
உள்ளுறங்கும் வேதனையை
பகிரவியலாத மனதின் சுவர்களில்
சதை நெகிழ்ந்து
உதிரம் வெளிறி
பிடிப்பற்ற மல்லிக்கொடிபோல்
நான் அலைபாயுதல் கண்டாயா ....

மாமழை ஒன்று மறுதலித்தப் பின்னால்
வெட்டாந்தரையாயிருக்கும்  இவ்விரவின்  பக்கங்களில்
மசித்துளி போல்  உனதன்பைச்சொட்டி
எதையாகிலும் எழுதிப்போயேன்.....

~~க.உதயகுமார்

No comments:

Post a Comment