Tuesday 22 October 2013

ஞாலத்தின் மாணப் பெரிது


பாலையின் நடுவே
தகித்தலையும் நெடும்பயணத்தின் கால்களுக்கு
உன் குழந்தைமை போன்றதொரு
அன்பின் முத்தத்தை
என் ரணங்களில் ஒத்திவிடும்
தலைக்கு மேல் நிலைகொண்ட பறவையின்  நிழல்
நின்னை நினைவூட்டுகிறது
அது என் பாதங்களுக்கு
போதவே போதாத  நிழலென்றாலும்

No comments:

Post a Comment