Thursday 7 November 2013

மரணம் சரணம் கச்சாமி

இறந்தவர்கள் 
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்  புகைப்படங்களில் 
உதிர்ந்த இறகின் மயிர்முகங்களில் 
பறவையை தேடிக்கொண்டிருக்கிறேன் 

இருப்பை மறுத்து  
தூக்கிட்டு மரித்தவர்  
புகைப்பட விழிகளில் 
அன்பு கசிந்து உறைகிறது 
நிலம்தொட்ட இலையின் 
புடைத்த நரம்புகளில் 
வேர்களின் சாயலை கண்டுணர்கிறேன்

நதி புதைக்கப்பட்ட மணற்குழிகளைப்போல 
இறந்தவர்களின் கைபேசி எண்களும் , முகநூல்பக்கங்களும் 
நிலையாமையை நினைவூட்டியபடி இருக்கிறது 
கடற்கரையில் காலுக்கு கீழே 
கரையும் மணலில் 
வாழ்க்கை தீர்ந்துகொண்டிருப்பதை 
சலனமற்று படித்துக் கொண்டிருக்கிறேன் 

--க.உதயகுமார்


1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete