Tuesday 29 October 2013

இலையின் இயல்பற்ற இதயம்

நதிவழி நீந்தும் 
இலைபோல் 
லாவகம் வருவதில்லை 
விதிவழி வற்றும் வாழ்வில் 
ஓவியத்தின் கண்களென 
நிலைகுத்தியே நிற்கிறது 
துயர் 
சன்னமாய் விரிசல் விட்டு 
சுக்குநூறாய் உடைகிறது 
கண்ணாடி மனசு 

இலைகளுக்கு எப்படி 
இவ்வளவு எளிதாக இருக்கிறது 
தன்னை விடுவித்துக் கொண்டு 
சுதந்திரமாய் சுற்றித் திரிய ?
மெலிதாய் விழவும்
ஒரு மழைக்குமுன்னதான காற்றில் 
ஈரமாய் எழவும் 
இலையின் இயல்பற்ற இதயத்தால் 
முடிவதில்லை 

பச்சை காய்ந்து 
பழுப்பு மினுங்கும் 
பருவத்தே 
நானுமோர் இலையாவேன் 
என்ற எதிர்பார்ப்பு இல்லாமலில்லை 

--க.உதயகுமார் 

http://navinavirutcham.blogspot.com/2013/07/blog-post_7.html

No comments:

Post a Comment