Friday 18 October 2013

மௌனத்திரைக்குப் பின்னால் ...



மெழுகுள்ளம்  என்று தெரிந்தே
தீயிலிட்டு  சிரிப்பது
வன்மம் என்கிறேன் நான் ...
கவனக்குறைவு  என்கிறீர்கள் நீங்கள்

 பரிகசித்து
கைகொட்டி ஆர்ப்பரிப்பது
பகடி வதை என்கிறேன் நான் ...
வதையூட்டிய  காயத்தின்  கண்ணீரெல்லாம்
நீலிக்கண்ணீர் என்கிறீர்கள்  நீங்கள்

விடமொத்த  வார்த்தைகளை  துப்பிச்செல்வது
வீறிடும் வலி என்கிறேன் நான்
அடவுகட்டி நடிக்கிறான் என
அப்போதும் விடாமல் துப்புகிறீர்கள்

மென்மனசை கசக்கி எரிவது
சித்ரவதை  என்கிறேன் நான்
இதற்கெல்லாமா கோவிப்பாய்...?
உன் மனநலம்   சரியில்லை என சான்றளிக்கிறீர்கள்

புரிவதே இல்லை
என்  மொழி உங்களுக்கும்
உங்கள் மொழி எனக்கும்

சில நேரங்களில்
மொழியை மௌனமாக்கி
மௌனத்தை மொழியாக்குவது
எனக்கு  வசதியாக இருக்கிறது

3 comments:

  1. அருமையா இருக்கு அண்ணை .

    ReplyDelete
  2. Valiyum Vedhanayum ellorukkum purivadhillai.. Nee sellum valiyaga sendrorku maathiramae adhu vilangum..
    Eninum dhitan kol.. nee palarai thetra vendiya kaalam varumpozhudhu ivai payanpadum.. :)

    ReplyDelete
  3. ungal moliyai naan purinthirukkiren nanbare .

    ReplyDelete