Sunday 22 September 2013

......................

எல்லா செடியுமா
ஆழ வேர்பிடிக்கிறது ...?
எல்லா பூக்களுமா
கருத்தரிகின்றன ?
எல்லா மழையுமா
நதிசேர்கிறது..?
எல்லோர் அன்பையும்
புரிந்துகொள்ள முடிகிறதா
உங்களால் ?
உள்ளழும் இதயத்தை
யாரால் அடையாளம் காண முடிகிறது ?
எது தான்
முழுமையானது இங்கே ..?
உங்கள் தலைக்கிரீடம்
இன்னமுமா மேலிருக்கிறது ..?

No comments:

Post a Comment