Wednesday 8 January 2014

கேட்பாரற்ற துயரின் குரல்

ஆதிமனத்தின் புனைவாக
அக்குரல்
சன்னமாக புறப்பட்டு
பின் காற்றின் நாவால் துலக்கமடைகிறது

யுகம் யுகமாய் பயணப்பட்டும்
நீர்த்துப் போகாமல்
உயிர்த்திருக்கிறது
செதிலேரிய தொண்டையின்
அவலஒலி

மீளாவலியுற்று
நடுகைப்பொழுதில்
அலறும்
துணையற்ற ஆணொருவனின்
பரிச்சயமான குரல் போலவே
எனக்குத் தெரிகிறது
காற்றில்
அவ்வளவு வெம்மை ...

அத்தனித்த இதயத்தின்
துயர கானம்
நீண்டு நீண்டு நீளும்
மகாகாலத்தின் சுவர்களில்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது
உங்கள் செவிகளோ
மூடியே கிடக்கின்றன

உதிரத்தின் புளித்த சுவை
உங்களுக்கும் பிடிக்குமென்றால்
அநாதிகாலமாக நீளும்
அந்நெடுங்குரலின் மிகுதுயரள்ளி
மிடறு மிடறாய்
பருகிக் களிப்போம்
என்னோடு வருகிறீரா ?

1 comment: