Thursday 9 January 2014

நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்

இன்றுடைந்த  மரப்பாச்சியை
சேர்த்துவைக்கிறேன்
நாளைக்கு எப்படியாகிலும் சரி செய்ய வேண்டும்

பின்னொரு நாளில்
துளி துளியாய்
உதிரம் பூக்கும்
என் சதைக் கீறலை
அன்பொழுக நக்கிவிட
எனக்கு அம் மரப்பாச்சி தேவைப்படலாம் இல்லையா ?

உதாசீனப் படுத்தப்பட்ட பிரியங்களை
பின்னொரு நாளுக்கென
எடுத்துவைக்க வேண்டும்

ஒரு தற்கொலை முடிவு
தூக்க மாத்திரைகளை
எண்ணிக் கொண்டிருக்கும் போது
அப்பிரியங்கள்
என் மதுக் குடுவையை போட்டுடைக்கலாம் இல்லையா?

இக்கணத்தின்
அதிருப்திகளை
விஷம் ஒத்த வார்த்தைகளை
எஞ்சிய கண்ணீரை
நாளைக்கென சேமித்தால் என்ன ?
இக்கணம் வாத்சல்யமாக நீளட்டுமே




1 comment: