Thursday 19 December 2013

..........................

நான் கடலேறிப்போய் 
அதற்கப்பால் ஒரு கானகம் புகட்டுமா...
ஏதோ ஒரு மரம் 
ஏதோ ஒரு நதி 
எனக்கே எனக்கென அங்கிருக்காதா 
எனக்கென ஒரு ஊர்குருவி 
அங்கந்த பாடலை இசைக்காதா 
நதியில் மிதக்கும் இலையில் 
சேர்ந்தென் 
ஆவி போக்கட்டுமா 
என்னை கேள்விகேட்காத மலரின் இதழ்களில்
முத்தமிட்டு மரிக்கட்டுமா
என்னை சந்தேகிக்காத மானொன்றோடு
களித்து நடனமிட்டு
உயிர் நீங்கி உய்க்கட்டுமா

எனக்கென்ன இருக்கிறது இங்கே
புரிந்துகொள்ள யாருமற்ற ஊரைவிடவும்
புரிந்த காடொன்று உசிதமில்லையா

2 comments:

  1. அப்படித்தான் தான் இன்றைக்கு தோணுது...!

    ReplyDelete
  2. கவிதை அருமை....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete